198 வருடங்களின் பின்பு, 19 பேரை தேசத் துரோகப் பட்டியலில் இருந்து நீக்கிய ஜனாதிபதி



ஊவா வெல்லஸ்ஸ புரட்சியில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் தேசத் துரோக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

1818ம் ஆண்டு இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ புரட்சிக்கு மொணரவில கெப்பெட்டிபொல தலைமை தாங்கினார். 

இதற்கமைய, மொணரவில கெப்பெட்டிபொல உள்ளிட்ட குழுவினரை அப்போது ஆட்சி பீடத்தில் இருந்த பிரித்தானிய ஆளுனர் தேசத்துரோக பட்டியலில் பதிவு செய்திருந்தார். 

இந்தச் சம்பவம் இடம்பெற்று 198 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர்களின் பெயர்களை தேசத்துரோக பட்டியலில் இருந்து நீக்கும் வகையிலான அறிக்கையொன்றை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார்.