பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்க!



பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணமாக 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே பஸ்களில் பயணிக்கும் பயணிகள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.