அனித்தாவுக்கு காத்திருக்கும் விருது



வெளி­நா­டு­க­ளிலும் இலங்­கை­யிலும் இவ்­வ­ருடம் நடை­பெற்ற விளை­யாட்டுப் போட்­டி­களில் தேசத்­துக்கும் வடக்கு மாகா­ணத்­திற்கும் பெரு­மையும் புகழும் ஈட்­டிக்­கொ­டுத்த வடக்கு மாகாண விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களைக் கௌர­விக்கும் வர்ண விருது விழா நாளை மறு­தினம் நடை­பெ­ற­வுள்­ளது.
அனித்தா
இவ்வரு­டத்­திற்­கான வடக்கின் விளை­யாட்­டுத்­துறை நட்­சத்­திர விருது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெக­தீஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.
இவ் வருடம் நடை­பெற்ற 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்­தலில் 3.41 மீற்றர் உய­ரத்தைத் தாவி புதிய இலங்கை (தேசிய) சாத­னையை நிலை­நாட்­டி­ய­துடன் பல்­வேறு மெய்­வல்­லுநர் போட்­டி­களில் தங்கப் பதக்­கங்கள் வென்­ற­மைக்­காக அனித்­தா­வுக்கு இந்த விருதை வழங்க வடக்கு மாகாண வர்ண விருது விழா ஏற்­பாட்டுக் குழு­வினர் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்­துள்­ளனர்.
வடக்கு மாகாண விளை­யாட்­டுத்­துறை திணைக்­களம், கல்வித் திணைக்­களம் ஆகி­யன இணைந்து ஏழா­வது தட­வை­யாக ஏற்­பாடு செய்­துள்ள வடக்கு மாகாண விளை­யாட்­டுத்­துறை வர்ண விருது விழா சாவ­கச்­சேரி நக­ர­சபை பொன்­விழா மண்­ட­பத்தில் 21ஆம் திகதி புதன்­கி­ழமை பிற்­பகல் 3.00 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
சர்­வ­தேச போட்­டி­களில் கலந்து கொண்ட நுவன் குமார (வெண்­கலப் பதக்கம், தெற்­கா­சிய விளை­யாட்டு விழா, மூன்று அம்ச விளை­யாட்டு), வி. ஆஷிகா (வெள்ளிப் பதக்கம், கனிஷ்ட பொது­ந­ல­வாய பளு தூக்கல்), கே. சப­ரி­ச­னுஜா பி. கிருத்­திகா, ஆர். பிரவிந்த் (மூவ­ருக்கும் வெள்ளிப் பதக்­கங்கள், ஆசிய கனிஷ்ட த்ரோ போல் வல்­லவர் போட்டி), புத்­திக இந்தி­ர­பால (வெண்­கலப் பதக்கம், ஆசிய கடல்சூழ் பிராந்­திய மெய்­வல்­லுநர் போட்டி), செப­மா­லை­நா­யகம் ஞான­ரூபன், எடிசன் பிக­ராடோ (இரு­வரும் பங்­கேற்பு, பங்­க­பந்து தங்கக் கிண்ணம், தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ளனக் கிண்ணம்), எஸ். கொட்வின் (பங்­கேற்பு, பங்­க­பந்து தங்கக் கிண்ணம், 23 வயதின் கீழ் ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனக் கிண்ணம்), கே. நவ­நீதன் (வெள்ளிப் பதக்கம், தி க்ரேட் ரிலே மலே­சியா), கே. நெப்­தலி ஜொய்சன் (புதிய சாத­னை­யுடன் தங்கப் பதக்கம், அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா), ஜீ. டபிள்யூ. குமார (பங்­கேற்பு, ஆசிய மற்றும் உலக கபடி போட்­டிகள்). ஆகி­யோ­ருக்கும் விசேட விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
இத­னை­விட கல்வி அமைச்சு, விளை­யாட்­டுத்­துறை சங்­கங்கள் ஆகி­யன இவ் வருடம் நடத்­திய போட்­டி­களில் பங்­கு­பற்றி பதக்­கங்கள் வென்ற மற்றும் அடைவு மட்­டத்தை எட்­டிய வீர, வீராங்­க­னை­க­ளுக்கு வர்ண விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள், விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் செய­லாளர் ஆர். ரவீந்­தி­ரனின் தலை­மையில் நடை­பெறும் இவ் விழாவில் 300 க்கும் மேற்­பட்ட வடக்கு மாகாண விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளனர்.
தனி நபர் போட்டி நிகழ்ச்சிகள், அணி நிலை போட்டி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பிரகாசித்தவர்களுக்கு வர்ண விருதுகள் வழங்கப்படும். மாகாண கல்வி அமைச்சர் பி. குருகுலராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்குவார்.