ஹல்துமுல்லை பத்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாடை இழந்து 175 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
விபத்து சம்பவிக்கும் போது குறித்த காரில் 5 பேர் பணயித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

