இறுதிக் கிரியைகள் 31ல்



இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலிக்காக   நாடாளுமன்றம் கொண்டு வரப்படவுள்ள,மறைந்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ளளன. 

ஹொரணவில் இதனை நடத்தத் தீர்மானித்துள்ளதாக, அவரது புதல்வர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.