ஏ.ஆர். ரஹ்மானுக்கு ராசியான ஒஸ்கார்



2009 இல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
இம்முறையும் ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
”பீலே – பர்த் ஆஃப் ஏ லெஜண்ட்” என்கிற ஆங்கிலப் படத்திற்கு இசையமைத்த ரஹ்மான், அந்தப் படத்துக்காக சிறந்த இசை, சிறந்த பாடல் (Ginga) என இரு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 24 அன்று வெளியிடப்படும்.
அதில் சிறந்த 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
பிப்ரவரி 26 அன்று விருதுகள் வழங்கும் விழாவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்