தன்னுடைய நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணிப்பு நடைமுறைகளை கடுமையாக்கும் நேரம் வரை, சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை செய்திருக்கிறார்.
டிரம்பின் ஒரு செயலதிகார ஆணை, எல்லா அகதிகளின் அனுமதியை நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தியும், தீவிர சோதனை மேற்கொள்ள உத்தவிட்டும் குடியேற சாத்தியமாகும் பலர் மீது கடும் நடவடிக்கைகளை விதித்திருக்கிறது.
"குறிப்பிட்ட கவனம்" செலுத்தக்கூடிய நாடுகளின் குடிமக்களுக்கு 3 மாதங்களுக்கு விசா வழங்குவதையும் இந்த ஆணை இடைநிறுத்தியுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெறுகின்ற நாடுகள் பற்றி உடனடியாக தெளிவாகத் தெரியவில்லை.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
தீவிர இஸ்லாமியவாத தீவிரவாதிகளை அமெரிக்காவில் நுழைய விடாமல் இருக்க செய்யும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை அகதிகளின் வருகையை ஆதரிப்போரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தீவிர சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை மறைமுகமாக கூறுகின்ற விதம் என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம், அகதிகள் நுழைவதை தடுத்திருப்பது, அவர்கள் தான் அமெரிக்காவை பாதிப்புற செய்கிறவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளது,
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த ஆணை அமெரிக்க கோட்பாடுகளை மீறுகின்ற ஒன்று என்று குடியரசு கட்சியின் செனட் அவை உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறியிருக்கிறார்.
வன்முறை மற்றும் போரால் உயிர் தப்பி வருகின்ற குழந்தைகள் அமெரிக்காவில் நுழைவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுத்திருப்பது தன்னை மனமுடையச் செய்துள்ளதாக நோபல் பரிசு வென்ற மலாலா யுசுஃப்ஸாய் கூறியிருக்கிறார்.