அரசியலமைப்புச் சபை, கூடவுள்ளது



இன்று காலை பாராளுமன்றத்தில் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு அரசியலமைப்புச் சபை, கூடவுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான உப குழுவின் ஆறு அறிக்கைகள் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

எதுஎவ்வாறு இருப்பினும், அரசாங்கத்தின் யோசனை அடங்கிய அறிக்கை இன்றும் முன்வைக்கப்படாததால் அது பாராளுமன்றத்துக்கு கிடைத்த பின்னர் விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புச் சபையில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.