அம்பாரையில் பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலைக்கு முயற்சி



அம்பாறை மாவட்டம் மங்களகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முற்பட்டபோது, துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு ரி.56 ரக துப்பாக்கியால் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக மங்களகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் ஜயக்கொடி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த கான்ஸ்டபிள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.