இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.
விஜயநகரில் குனெரு ரயில் நிலையத்திற்கு அருகில் 7 ரயில் பெட்டிகளும், ரயில் எஞ்சினும் தடம்புரண்டன என்று கிழக்கு கடற்கரை ரயில்வே துறையின் தலைவர் ஜே.பி மிஷ்ரா தெரிவித்திருக்கிறார்.
சிதைந்த ரயில் பெட்டிகளுக்கு இடையில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால், உயிழந்தோரின் எண்ணிக்கை உயரலாம் என்று மீட்புதவிப் பணியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.இந்த ரயில் தடம்புரள்வதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.