கடந்த வருடம் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து நேர்முகப் பரீட்சையில் தெரிவான 222 பேருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இவர்களில் தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 164 பேரும் சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் 58 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இவ்வாறு செய்துவருகின்ற இந்த நல்லாட்சியை குறை கூறி பிழை காண வேண்டாம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பல வருடங்களாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் இங்கு கருத்து தெரிவித்த போது, கிழக்கு மாகாணத்தில் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரையான காலப் பகுதிகளில் பட்டங்களை பெற்று இதுவரையும் வேலையில்லாமல் 45,00 பட்டதாரிகள் உள்ளனர் என்றார்.
எங்களின் பராமரிப்புக்குக் கீழ் தாய், தந்தையர்கள் இருக்கவேண்டியவர்களின் நிலைமை மாறி நாங்கள் அவர்களின் பராமரிப்புக்குக் கீழ் இன்று வரையும் இருப்பதை எண்ணி நாங்கள் மனவேதனையடைகின்றோம் எனவும் கூறினார்.
இதுதொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பதிலளிக்கையில், இன்றைய அரசு பதவியேற்ற காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பட்டதாரிகளுக்கான நியமனங்களையும் அதிபர்கள் நியமனங்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறு வழங்கி வைக்கப்படும் நியமனங்கள் யாவும் அவரவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன.

