ரயில் தடம் புரள்வு



அவிஸ்ஸாவளை பகுதியில் களனிவெல்ல புகையிரத பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக கொழும்பு நோக்கி செல்ல இருந்த மூன்று புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதேவேளை புத்தளம் - கல்கிஸ்ஸை புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த புகையிரதமும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.