கடற்படை வீரர் சுட்டு தற்கொலை



திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னுடைய டீ. 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.