மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
இந்த அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு துண்டுகள் , சில கம்பி துண்டுகள் , மனித பல் மற்றும் இரு வெள்ளிச் சங்கிலி துண்டுகள் உட்பட சில தடயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது
1990ம் ஆண்டு முதல் 1914 ம் ஆண்டு வரை 24 வருடங்களாக முறக்கட்டான்சேனை ராணுவ முகாம் பாவனையிலிருந்த காணி மற்றும் குடியிருப்புகளின் ஒரு பகுதி, யுத்தம் முடிவடைந்த நிலையில் 2014ம் ஆண்டு ஜுலை மாதம் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டன.
காணி உரிமையாளரொருவர் தனது வீட்டுக்கான கழிப்பறை குழி வெட்டிய போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் குறித்த தடயங்கள் தென்பட்டதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டிட நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
அகழ்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாக இடை நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை தொடர நீதிமன்ற அனுமதி தங்களுக்கு கிடைத்துள்ளதாக காணி உரிமையாளரான வானதி உதயகுமார் தெரிவிக்கின்றார்.

