-கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ் -
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (08) நடைபெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது எனப் அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் அமைந்துள்ள நல்லையா மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இப்பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற விரும்பின்; பதிவாளர் அலுவலகம் 065-2240533 மற்றும் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் 065-2240584 ஆகியோருடன் மேற்படி தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

