-ரீ.எல்.ஜவ்பாகான்-
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த வீரசிங்கம் தர்மதன் (வயது 17) என்ற மாணவன், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலில் நீராடியுள்ளான். அப்போது திடீரென்று இம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 7 ஏ மற்றும் 2 பி பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த வீரசிங்கம் தர்மதன் (வயது 17) என்ற மாணவன், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலில் நீராடியுள்ளான். அப்போது திடீரென்று இம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 7 ஏ மற்றும் 2 பி பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment