மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் பொய் பிரசாரங்களால் ஏமாற வேண்டாம்



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிர் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தவறான பிரசாரங்களைக் கேட்டு நாட்டு மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது அழைப்பின் பேரிலேயே ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இலங்கை வருவதாகவும் வேறு எவ்வித அரச உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளும் இடம்பெறாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் தீய சக்திகளை அடையாளம் கண்டு செயற்படுமாறும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்