வடமத்திய மாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு மனித சமூகத்தின் உயர்வுக்காக சிறப்பாக பணியாற்றியோரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரஜரட்ட தங்கவிருது விழா - 2017, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அனுராதபுரம் கோல்டன் மெங்கோ விருந்தகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
இலக்கியம், கலை. சமூக சேவை, விளையாட்டு, பாரம்பரிய மருத்துவம், தொழில்வாண்மை, பாரம்பரிய கலைத்திறன்கள் மற்றும் புத்தாக்கங்கள் போன்ற பத்து துறைகளைப் பாராட்டி, ஆறு ஞாபகார்த்த விருதுகள் உள்ளிட்ட 28 விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.


Post a Comment
Post a Comment