காற்று, மழையினால் மின்சாரத் தடை ஏற்பட்டால் தொலைபேசி இலக்கங்கள்



நிலவும் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலையால் மின்சாரத் தடைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு மின்சக்தி அமைச்சினால் மூன்று தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் 1987, 1910 மற்றும் 1901 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மின்சாரத் தடை குறித்து அறிவிக்க முடியும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் மின்சார விநியோகத் தடையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.