இந்திய நிவாரணக் கப்பல் கொழும்பு வருகை



சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலை தவிர மற்றுமொரு இந்தியக் கப்பல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ  தெரிவித்துள்ளார்.