கொழும்பு 2 மற்றும் 3 பகுதிகளில், நாளைக் காலை 10 மணி முதல் 18 மணிநேரங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொழும்பு 8, கொழும்பு 10 மற்றும் ஹவலோக் பகுதிகளிலும் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment