இரத்தினபுரி, குட்சேட் வீதியில்



இரத்தினபுரி, குட்சேட் வீதியில் செலான் சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் பஸ் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கல்லேல்ல, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.