சுங்கத் தீர்வையின்றி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அனுமதி



இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய இம் மாதம் 19ம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், பாரியளவிலான வர்த்தகர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்த்தகர்களும் இதனால் பயனடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.