-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்-
காத்தான்குடி, கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் காணப்பட்ட இச்சடலம் தொடர்பில் தமக்குப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காத்தான்குடி, கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் காணப்பட்ட இச்சடலம் தொடர்பில் தமக்குப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment