அரச முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது



அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் மூன்றிற்கான போட்டிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
இந்த பரீட்சைகள் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நடைபெறவிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலைக் காரணமாக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.