பதவி நீக்கியமை வருத்தமில்லை



எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அது தனிப்பட்ட தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன கூறியுள்ளார். 

இன்று காலையே தான் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டதாகவும் அதற்காக தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இன்று பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று அதிகமான மக்கள் சுதந்திரமாக வாழ்வது மஹிந்த ராஜபக்‌ஷ காரணமாகவே என்றும், அவரை வாழ்நாள் முழுவது தான் மதிப்பதாகவும், இதன்காரணமாக தனது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதால் வருத்தப்பட போவதில்லை என்றும் கே.எச். நந்தசேன கூறியுள்ளார்.