சர்வதேச விசாக தின நிகழ்வின் நிறைவு நிகழ்வு இன்று



சர்வதேச விசாக தினத்தின் ஒரு அங்கம் நேற்று தாமரைத் தடாகம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்கவில் நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கலந்து கொண்டார். 

இதேவேளை, உலக பொது மாநாடு நேற்று (13) மாலை நடைபெற்ற நிலையில், பிரதம அதிதியாக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி பங்கேற்றார். 

நேபாள ஜனாதிபதியுடன் 20 க்கும் மேற்பட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாக தின நிகழ்வின் நிறைவு நிகழ்வு இன்று (14) கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.