வெசாக் தினத்தில் கைதிகள் விடுதலை



வெசாப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 575 கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் சிறு குற்றங்கள் இழைத்தவர்களை விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
அபராதத்தை செலுத்த தவரிய கைதிகளும் 75 வயதுக்கு மேற்பட்ட 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளுமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.