நம்பிக்கையில்லாப் பிரேரணை



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரேரணையில் வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து முதலமைச்சர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.