இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும்,உலகளாவிய முஸ்லிம் உறவுகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் #Ceylon24 மகிழ்ச்சியடைகிறது.
உலக நாடுகளில் ரமலான் நோன்பின் முடிவை குறிக்கும் விடுமுறையை இஸ்லாமிய சமூகம் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அதில் சில நாடுகளிலிருந்து
உலக நாடுகளில் ரமலான் நோன்பின் முடிவை குறிக்கும் விடுமுறையை இஸ்லாமிய சமூகம் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அதில் சில நாடுகளிலிருந்து
- பிறை தெரிந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் தங்களது கொண்டாட்டங்களை நேற்று முதலே (ஞாயிறு) தொடங்கின. டல்காமன் என்ற எகிப்து கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சி.
- ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரினால் சின்னாபின்னமான மொசூல் நகரில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
- இஸ்தான்புல்லிலுள்ள இந்த துருக்கிய இஸ்லாமியர்கள் தங்களுடைய ஈத் பிரார்த்தனைகள் வரலாற்று சிறப்புமிக்க நீல மசூதியில் நடத்தியுள்ளனர்.
- ஹமா நகரில் நடைபெற்ற தொழுகையில் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் கலந்து கொண்டார்.
- ரஷ்ய தலைநகரில் உள்ள இஸ்லாமியர்கள், மத்திய மசூதிக்கு அருகே உள்ள வீதியில் தொழுகை நடத்தினர்.
- முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசான கிர்கிஸ்தானிலும், இஸ்லாமியார்கள் வீதிகளில் தொழுகையில் ஈடுபட்டனர்.
- இந்த பாலத்தீன பெண்கள் மற்றும் சிறுமிகள் காஸா நகரில் தொழுகை செய்வதற்காக வந்துள்ளனர். இந்த வாரம், காஸாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு எகிப்து எரிபொருள் விநியோகத்தை தொடங்கியுள்ளது.
- ஈத் பெருநாளை முன்னிட்டு பெரும்பான்மை முஸ்லிம் நகரான மாராவியில் பிலிப்பின்ஸ் ராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அங்குதான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவம் சண்டையிட்டு வருகிறது.










Post a Comment
Post a Comment