நீதிபதி இளஞ்செழியன் மீது குறியா அல்லது வேறு நபர்களா?



நல்லூரில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை மறைக்கும் முகமாக ஒரு நபர் அங்கிருந்த ஊடகங்களுக்கும் யாழ்பான பிரதி பொலிஸ் அத்தியாட்சகருக்கும் சித்தரித்த கதைகளை வெளியிட்டார்.
குறித்த நபர் தெரிவிக்கையில் நான் இச் சம்பவத்தை நேரில் பார்வையிட்டேன். உண்மையில் நீதிபதி மீதோ நீதிபதியின் கார் மீதோ துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட வில்லை.