கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் செயலாளராக நிகமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, போகொல்லாகமவை நியமிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டத்தரணியான ரோஹித்த போகொல்லாகம, இலங்கையின் முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment