கிண்ணியாவில் 2,600 டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது



கிண்ணியாவில் 2,600 டெட்டனேட்டர்கள் மற்றும் 492 அடி கோட்வயர்களுடன் ஒருவர் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணியா-4, புஹாரியடிச் சந்தியில் விற்பனைக்காகவும், செந்தப் பாவனைக்கவும் 2,600 டெட்டனேட்டர்களையும் 492 அடி நீளமான கோட் வயர்களையும் வைத்திருந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

47 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 4 லட்சத்திற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு கைதுசெய்தவர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமை பொலிஸ் காரியால பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.