வசந்தம் வானொலி முன்னாள் அறிவிப்பாளர் ATM. பஸ்லி காலமானார்




குருணாகலை,மிதியாலையைச் சேர்ந்தவரும், வசந்தம் FM இல் வானொலி அறிவிப்பாளராகவும் பணிபுரிந்த,கவிஞர் ஏ.ரி.எம். பஸ்லி இன்று காலமானார்.

கடந்த வருடம் முதல்,இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்து, சத்திர சிகிச்சை மேற்கொள்ள இருந்து நிலையில், இன்று மரணித்த இவரது ஜனாசா நல்லடக்கம், மடிகே மிதியால பள்ளிவாயல் மையவாடியில்,இடம் பெறவுள்ளது.