மியன்மார் முஸ்லிம் அகதிகள் நாளை முதல் ரத்மலானை வீட்டுக்கு மாற்றம்



யாழ் கடலில் மீட்கப்பட்டு மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு கல்­கி­ஸையில் தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்படவுள்ளனர்.
இதற்கான விசேட உத்தரவை யாழ் மல்லாகம் நீதிமன்றம் இன்று வழங்கி உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் எமக்கு தெரிவித்தார்.
மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக பொலிஸார் தெரி­வித்து வந்த நிலையில் அவர்கள் அங்­கி­ருந்தும் இடம் மாற்­றப்­படவுள்ளனர்.
தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அக­தி­களை இடம் மாற்­று­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சு, குடி­வ­ரவு ,
குடி­ய­கல்வு திணைக்­களம்,
மிரி­ஹான பொலிஸார்,
யு.என்.எச்.சி.ஆர் நிறு­வனம் என்­பன
அனு­மதி வழங்­கி­யுள்­ள­ன.
இந்­தி­யா­வி­லி­ருந்து படகு மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் பய­ணித்த போது படகு கோளா­றுக்­குள்­ளாகி இலங்­கையின் வடக்கு கடல் எல்­லையில் கைது செய்­யப்­பட்­டனர்.
பின்பு அவர்கள் காங்­கே­சன்­துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் 7 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 16 பிள்­ளைகள் அடங்­கு­கின்­றனர்.