இரணைமடு மக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்



தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைமடு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு - கோட்டை - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். 

இதற்கமைய, இவர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் கொழும்பு - கோட்டை - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.