சைட்டத்தை உடனடியாக ரத்து செய்!






(க.கிஷாந்தன்)

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சைட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் 02.08.2017 அன்று மாலை 3 மணிக்கு அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக கையெழுத்து வேட்டையொன்று, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்தது.

இலவச கல்வியை இல்லாதொழிக்கும், நோயளர்களை ஆபத்தில் தள்ளும் எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பத்தாயிரம் கையெழுத்துகள் சேகரிக்கப்படும் என ஏற்பாட்டுகாரர்கள் தெரிவித்தனர்.