சப்ரகமுவ மாகாணத்திலும் 20க்கு ஆதரவு




இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு கிட்டியுள்ளது. 

இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, 21 மேலதிக வாக்குகளால் இந்த யோசனை சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. 

இதேவேளை, நேற்று 20வது திருத்தச் சட்டம் தொடர்பான யோசனை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.