ஈரப் பலாக்காய் பறிக்க முட்பட்டவர் பலி




வென்னப்புவ - வய்க்கால் பகுதியில் இரும்பு கம்பியை பயன்படுத்தி ஈரப் பலாக்காய் பறிக்க முற்பட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவர் இரும்புக் கம்பியால் ஈரப் பலாக்காய் பறிக்க முற்பட்ட போது, குறித்த கம்பி, அருகில் இருந்த அதிஉயர் மின் கம்பத்தில் மோதியுள்ளது. 

இதனால், மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் கிடந்த அவர், நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.