அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் தலைவர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அட்டாளைச்சேனை மையவாடியில் இன்று (24) சிரமதானம் இடம்பெற்றது.
ஊடக நடவடிக்கைகள், ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை செயற்பாடுகளிலும் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.
முஸ்லிம் – தமிழ் மக்களின் சமூக, சமய, கலாசார மற்றும் அரசியல் விவகாரங்களில் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment