சுன்னாகத்தில் கடைகள் பரவிய தீ கட்டுக்குள்




யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மின்சார ஒழுக்கினால் மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. 

இந்த தீ விபத்து நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. 

சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது. 

ஒரு புடவை கடை மற்றும் நகை கடை என்பவற்றில் தீ பரவியுள்ளது.