கலிகமுவ கடையில் பரவியது, தீ




கலிகமுவ நகரத்தில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் கட்டிடம் முழுதாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 02 – 02.30க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடைத் தொகுதிக்கு பின்னால் இருந்த வீடொன்றும் இதனால் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த இரண்டு கடைகளும் தீயினால் சேதமடைந்துள்ளது.
கண்டி , மாவனல்லை தீயனைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.