’ஜனாதிபதி தந்தை’ புத்தக வௌியீடு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றை, அவருடைய மூத்த மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார்.
“ஜனாதிபதி தந்தை” எனும் பெயரில் வெளிவரவுள்ள குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பில், தனது பார்வையில் அறிந்து கொண்ட விடயங்களை, குறித்த நூலில் அவர் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.