நாமல் உள்ளிட்ட அறுவர் கைது



பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர மற்றும் மூவர், ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹம்பாந்தோட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

பின்னி​ணைப்பு 

கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான, கொடிகார, சம்பத் அத்துகோரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.