கடவத்தை பகுதியில் வாகன நெரிசல்




கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடவத்தை, மங்கடவீதி சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு நோக்கி வரும் வீதியில் தண்ணீர் குழாய் ஒன்று வெடிப்பெடுத்துள்ளமையே இந்த வாகன நெரிசல் ஏற்படக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்காரணமாக மாற்று வழிகளை பயணிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.