ரத்தொட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது



ரத்தொட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.