சாவகச்சேரியில் வாள்வெட்டு - இருவர் காயம்



யாழ்ப்பாண சாவகச்சேரி – நுணாவில் - 190 ஆம் கட்டைப் பகுதி ஏ 9 வீதியிலுள்ள ´ஒட்டுத் தொழிலகம்´ ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கடை உரிமையாளரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

இதன்போது, குறித்த கடையில் தொழில் புரிந்த இளைஞனையும் தாக்கியுள்ளனர். 

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளாதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த கடை உரிமையாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.