கிந்தோட்டை - உயிராபத்துக்கள் இல்லை: சேதமாக்கப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடு



காலி - கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது, சேதமாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும் அரசாங்கத்தினால் நஸ்டஈடு வழங்கப்படும் என, அமைச்சர் வஜிர அபேவர்த்த குறிப்பிட்டுள்ளார். 

நேற்று இரவு இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே, இந்தக் கட்டுக் கதைகளைக் கேட்டு செயற்பட வேண்டாம் எனவும் அமைச்சர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதேவேளை, அப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.