மூன்று விதமான மரக்கறிகளின் இறக்குமதியை நிறுத்துமாறு ​கோரிக்கை



வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை  இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு, மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த உற்பத்திகள் உள்நாட்டில் கிடைக்கின்றமையினால், அவற்றை இறக்குமதி செய்கின்றமையினால், பல சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிடின் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அச்சங்கம்  அறிவித்துள்ளது.