இறக்காமம் அஷ்ரஃப் தினம்.



வரலாற்றில் முதல் தடவையாக இறக்காமம் அல் அஷ்ரஃப் மகா வித்தியாலத்தில் 1975 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்று வரைக்கும் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது பல பல துறைகளிலும் பல்வேறு இடங்களில் சேவையாற்றி வாழ்ந்து கொண்டு வருகிறனர்.


அந்த வகையில் அவர்களை மீண்டும் அழைத்து மீண்டும் பள்ளிக்கு போகலாம் அரிவரி கொரிவரி என்னும் தலைப்பில் பழய ஞாபகங்களை திருப்பிக் கொள்ள டிசம்பர் மாதம் 24ம் திகதி மாபெரும் நிகழ்சி ஒன்று நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வை சிறப்பிக்க 1993ம் ஆண்டு வருடத்தில் வெளியான O/L மாணவ நண்பர்கள் நேற்று சனி இரவு குடுவில் சுபைத்தீன் அவர்களின் வீட்டில் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இரவு சாப்பாடும் வழங்கப்பட்டதோடு அவருக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. 
பழய ஞாபகங்களை பேசி சிரித்து மகிழ்ந்ததோடு
அஷ்ரஃப் தினத்தை சிறப்பிக்க பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
மேலும் இது போன்ற நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.